எவ்வாறு பூசை செய்வது?


சரி எவ்வாறு பூசை செய்வது?

பூசை என்றால் மனதை ஒரு நிலைப்படுத்துதல்.


முதலில் வினாயகர் முன் தோப்புக்கரணம் போட வேண்டும். இவ்வாறு உட்கார்ந்து எழுந்திருப்பதால் உடலும் காதை அழுத்திவிடுவதால் புத்தியும் ஆரோக்கிய மடைகின்றன. உடலும் மனமும் சீரடைந்தவுடன் இருகரம் கூப்பி வேண்டுதலை மனதுக்குள் உச்சரித்தவாறே கோயிலில் வலம் வரவேண்டும் .ஒவ்வொரு சிலை முன்பும் தலைக்குமேல் இருகரம் கூப்பியபடியே சிறிது நேரம் நின்று பூசை செய்ய வேண்டும். வேண்டுதலின் தன்மைக்கேற்ப சுற்றுக்களின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்யவேண்டும். இவ்வாறு சென்று மூலவர் அல்லது கருவரைக்கு சென்று பின் வெளியே வரவேண்டும். இப்படி செய்தால் நிம்மதியும் காரிய சித்தியும் கிடைக்கும். கைகளை தொங்கவிட்டபடி வேறு நினைவுகளோடு சுற்றினால் பலன் இருக்காது. நிம்மதியடையாமல் ஒருவர் திரும்பினால் அவர் பூசை செய்த முறையில் தவறு உள்ளது என்றே அர்த்தம்.

கருத்துகள்

லேபிள்கள்

மேலும் காட்டு