மனிதன் எவ்வாறு உயர்ந்தவனாகிறான்?
அறம் செய்து ஆகாரம் செய்ய மனிதனால் மட்டுமே முடியும். இதுவே உயர்வாக கருத காரணம்.
அறம்: உயிரினங்களை வாழவைப்பதற்கு அறம் என்றும் உயிரினங்களை கொன்று உணவாக்குவதற்கு ஆகாரம் என்றும் கூறுவர். உதாரணத்திற்கு நெல் ஒரே இடத்தில் கொட்டி முளைக்கும் போது நன்றாக விளையாது. அதையே தனி தனியே நடும்போது அதன் இனம் நன்றாக தழைக்கும் நல்ல விளைச்சல் இருக்கும். இப்படி 100 மூட்டைநெல்லை வாழவைப்பது அறம்(புண்ணியம்) அதில் 10 மூட்டை நெல்லை உணவாக்குவது ஆகாரம் (பாவம்). பாவத்தைவிட புண்ணியமே மேலோங்கி இருப்பதால் மனிதன் புண்ணியவான் ஆகிறான் .இது நகரத்தில் வாழ்பவருக்கு பொருந்தாது. "நாடுமெச்சும் நகரம் என்பார் சொர்க்கம் என்பார் நல்வினையோ தீவினையோ அறியமாட்டார், ஆடுகின்ற தேவதைகள் அப்பாகேலு அறியதந்த இனம்சேரும் என்றே சொல்வார்" என்று அகத்திய முனிவர் கூறியுள்ளார். அதாவது பாவிகள் ஒன்றாக வாழுமிடம் நகரம். இவர்களுக்கு ஆறாவது உணர்வு சிறப்பாக இருக்காது அப்படியே இருந்தாலும் செயல்படுத்த முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக