திருமணமான அனைத்து பெண்களுமே பத்தினிதான்
பத்தினி என்பது சமஸ்கிருத வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல.
தமிழில் கணவன் மனைவி என்பதை சமஸ்கிருதத்தில் பதி பத்தினி என்கிறார்கள்.
பதி என்றால் கணவன்.
பத்தினி என்றால் மனைவி.
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டபிறகு கணவன் மனைவி என்று அழைக்கப்படுகிறார்கள். திருமணமாகாத ஆண் கணவன் என்று அழைக்கப்படுவதில்லை அதேபோல் திருமணமாகாத பெண் மனைவி என்று அழைக்கப்படுவதில்லை. அதனால் புரிந்துகொள்ளுங்கள் திருமணமான பெண்களையே பத்தினி என்று சொல்லவேண்டும்.
திருமணம் ஆகாத ஒரு பெண்ணை நீ பத்தினியா என்று கேட்டாள் நீ மனைவியா என்று கேட்பதாக அர்த்தம். இதற்கு அந்தப் பெண் என்ன பதில் சொல்ல முடியும். திருமணம் ஆன பின்பே அவர் யாருடைய மனைவி என்று சொல்லமுடியும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் திருமணமாகாத பெண்கள் பத்தினி அல்ல அதாவது மனைவி அல்ல. திருமணமான பெண்கள் அனைவரும் பத்தினியே அதாவது மனைவியே அவர்களது கணவனுக்கு
கருத்துகள்
கருத்துரையிடுக